மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை. அது நமக்குள்ளே இருக்கிறது. இந்த உலகம் முழமையும் மகிழ்ச்சியோடு இருக்கிறபோதுதான் நாமும் மகிழ்ச்சியாக வாழ முடியும். அதற்கு கடற்கரைகளை அழித்து உருவாக்குகிற செயற்கை நீர்விளையாட்டுப் பூங்காக்கள் தடையாக இருக்கின்றன. ஆற்று நீரைத் திருடி தயாரிக்கிற குளிர்பானங்கள் தடையாக இருக்கின்றன. சுருக்கமாக சொன்னால் ஒரு மண்புழுவால் மகிழ்ச்சியாக வாழமுடியாது போனால் ஒரு மீனால் மகிழ்ந்து நீந்த முடியாது. ஒரு ஆலமரம் சந்தோஷமாக கிளைவிரிக்க முடியாதுபோனால் ஒரு சிட்டுக் குருவியால் உவப்பின் இசையைப் பாட முடியாது. தொழுவத்தில் கன்றுக்குட்டி துள்ளி விளையாடாமல் போனால் அம்மாக்களின் முகத்தில் உவகையைக் காண முடியாது. மகிழ்ச்சி ஒரு சங்கிலி. அதன் முதல் கண்ணி கடவுளிடம் இருக்கிறது. இரண்டாவது கண்ணி ஒரு சிற்றெரும்பிடம் இருக்கலாம்.