Description
காலம், இடம் இவற்றைக் கடந்து, மனித இருப்பின் ஆதாரமாகத் திகழ்வது காதலும் காமமும்தான். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் இலக்கியங்கள், காதலுக்கும் காமத்துக்கும் நித்தியத் தன்மையை அளித்து வந்திருக்கின்றன. அன்பின் நீடித்த தன்மைக்கும் காமத்தின் நிலையற்ற தன்மைக்கும் இடையே தடுமாறுவதுதான் மனித வாழ்வாக இருக்கிறது. ஈகோ, பாதுகாப்பின்மை, காதல், காமம் இவை ஒன்றோடொன்று குழம்பியிருக்கிற காலத்தில் நாம் வாழ்கிறோம். இப்போது உண்மையான அன்பை நாம் வலிந்து சுமக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்றைய நவீன காதலும் காமமும் மெய்ந்நிகர் வெளியில் காலமற்ற ஒரு காலத்தில் செயல்படுபவை. ஆகவே அது, நித்தியத்தின் வடுக்களை தேவையற்றதாக கருதுகிறது.
தற்காலிக அன்பின் டிஜிடல் ஈரத்தில் வளரும் காதலுக்கு ஜென்ஸி தலைமுறை பழகிக்கொண்டது. இத்தகைய அன்பின் இடைவெளிகளைப் புரிந்து எழுதப்பட்ட கவிதைகளே மெய்ந்நிகர் கனவு.




